Thursday, 10 March 2016

மகளிர் தின விழா 08.03.2016

அம்மா சமூக சேவா மையத்தில் மகளிர் தின விழா 08.03.2016 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
திரு.கோபிநாத் (மூத்த கணக்கு அதிகாரி )ஓய்வு) சமூகநலத்துறை, புதுச்சேரி) மற்றும் பேரா.இரா.ச.குழந்தைவேலனார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் பரிசுகள் வழங்கினார்கள்.












Friday, 4 March 2016

மகளிர் தினம் - 08.03.2016 மாலை 6.30 மணி - அம்மாவில்

அம்மா சமூக சேவா மையம்
(இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு பெற்றது - பதிவு எண்.822/2007)
எண். 52 செயிண்ட் சிமோன்பேட்டை, முத்தியால்பேட்டை, புதுச்சேரி 605003
தொலைபேசி : 0413-2235577 / 9443601439 – 9443467945 – 9443801439
E-mail : krravi62@gmail.com / view : ammaravi.blogspot.in

மகளிர் தின விழா
நாள் : 08.03.2016 – செவ்வாய்க்கிழமை – மாலை 0630 மணி
இடம் : அம்மா சமூக சேவா மையம்

வரவேற்புரை : திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் – செயலாளர்
தலைமையுரை : திரு.ஏ.இளங்கோவன்- தலைவர்

சிறப்புரை :
“மகளிர் நலனுக்கான திட்டங்களும், பயன்பாடுகளும்”
திருமதி.ஸ்டெல்லாமேரி
(பாதுகாப்பு அதிகாரி – மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி)
“வள்ளுவம் காட்டும் பெண்ணியம்”
பேரா.இரா.ச.குழந்தைவேலனார்
(தலைவர், கடலூர் மாவட்ட தமிழ்ச்சங்கம்)
திரு.கோபிநாத்
(மூத்த கணக்கு அதிகாரி (ஓய்வு), சமூக நலத்துறை, புதுச்சேரி)

நன்றியுரை : திருமதி.வை.கண்ணம்மாள் – பொருளாளர்


“மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே …
--மகாகவி பாரதியார்





Tuesday, 1 March 2016

திரு.கோபிநாத் பணி ஓய்வு பெற்றார் - 29.02.2016

என் அன்பிற்கினிய நண்பர் திரு.கோபிநாத் (முதுநிலை கணக்கு அதிகாரி) சமூக நலத்துறை அவர்கள் 29.02.2016 அன்று பணி ஓய்வு பெற்றார். மிக நல்ல மனிதர் நல்ல அதிகாரியும் கூட. அதனாலேயே பலருக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். கையூட்டு பெறுவது தவறு என்று கறாராக இருந்தார். அதனாலேயே பணியிட மாற்றல் உள்பட பல பிரச்சினைகளைச் சந்தித்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வாய்மைக்குத் தான் எவ்வளவு சோதனை ...? அவரின் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ள பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம் .. நிச்சயம் சாதிப்பார்.... அவருடன் நான், அம்மா சமூக சேவா மைய பொருளாளர் திருமதி.வை.கண்ணம்மால், தலைவர்.ஏ.இளங்கோவன், துணைவியார்.