இலவச
சித்த மருத்துவ கருத்தரங்கம் – 09.11.2014
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக
சித்த மருத்துவ சேவை ஆற்றி வரும் தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு
இயக்கத்தின் புதுச்சேரி மாநில தொடக்க விழா 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி
முதல் அம்மா சமூக சேவா மையம், எண்.52 செயிண்ட் சிமோன்பேட், முத்தியால்பேட்டையில்
நடைபெற்றது.
நிகழ்விற்கு
அரிமா.மரு.க.கோ.மணிவாசகம் (செயலாளர், த.பா.சி.ம.பா. இயக்கம், நாகப்பட்டினம்) தலைமை
தாங்கினார். நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். மரு.சித்தி விநாயகம் (புதுச்சேரி),
மரு.மூர்த்தி (புதுச்சேரி), மரு.சோழராஜன் (பரங்கிப்பேட்டை).
மரு.கொ.இரா.இரவிச்சந்திரன்
(செயலாளர் – அம்மா சமூக சேவா மையம் -புதுச்சேரி) வரவேற்புரையாற்றினார். அதனைத்
தொடர்ந்து வரவேற்புரை வழங்கினார் : ஆன்மீக ரத்னா. மரு.எம்.வீ.பாலசுப்ரமணியன்
(பொதுச் செயலாளர் – ஜனகல்யாண் பேரியக்கம் – ஒட்டன்சத்திரம்). தமிழ்ப்பாரம்பரிய
சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் புதுச்சேரி பகுதியைத் தொடங்கி வைத்து
வாழ்த்துரை வழங்கினார் திருமிகு.என்.ஜி.பன்னீர்செல்வம் (உள்ளாட்சி அமைச்சர் –
புதுச்சேரி அரசு).
அதனைத்
தொடர்ந்து இலவச சித்த மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது.
“பால்வினை நோய்களும் – எய்ட்ஸ் நோயும்” எனும்
தலைப்பில் சித்தரடியார்.மரு.மு.தணிகாசலம் (காங்கேயம்) அவர்களும், “நாடி அறிதல்”
எனும் தலைப்பில் கவிச்சித்தர்.மரு.க.தனபாலன் (ஆரணி) அவர்களும், “சர்க்கரை நோய்
காரணங்களும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் மரு.பொன்.பகலவன் அவர்களும்
உரையாற்றினர். திரு.ஏ.இளங்கோவன் (தலைவர் – அம்மா சமூக சேவா மையம் - புதுச்சேரி)
நன்றி கூறினார்.
No comments:
Post a Comment