Saturday 28 November 2015

கடலூர் மக்களுக்கு தி ஹிந்து நாளிதழ் மூலம் உதவி

சமீபத்தில் கோரத்தாண்டவம் ஆடிய மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொதுமக்களிடமிருந்து "தி ஹிந்து" தமிழ் நாளிதழ் கேஸ் ஸ்டவ், பாய், போர்வை, பனியன் போன்றவற்றை நன்கொடையாக கேட்டு வாங்கி நேரிடையாக கடலூருக்கு அனுப்பி விநியோகம் செய்து வருகிறது. தி ஹிந்து நாளிதழின் இப்பணிக்கு உதவுகிற வகையில் இப்பொருட்களை இலவசமாக கொண்டு சேர்க்கும் பணியினை கே.பி.என் டிராவல்ஸ் செய்து வருகிறது. நானும் பி.எஸ்.என்.எல்-லில் பணி புரியும் எனது நண்பர்கள் டி.மனோகரன், ஜி.முருகேசன், ஆர்.ராஜசேகர், ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர்கள் சேர்ந்து நன்கொடை வசூலித்து அந்தத் தொகையில் 20 போர்வைகளையும், நானும் என் நண்பர் ஏ.இளங்கோவன், வை.கண்ணம்மாள் (அம்மா சமூக சேவா மையம்) சார்பில் 15 லுங்கிகளையும் நேற்று 27.11.2015 வெள்ளிக்கிழமை புதுச்சேரி கே.பி.என். டிராவல்ஸ் அலுவலகத்தில் மேலாளர் வசம் ஒப்ப்டைத்தோம். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கும், கே.பி.என்.டிராவல்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி ..

No comments:

Post a Comment