Sunday 8 March 2015

மகளிர் தின பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது.  முன்னதாக திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் செயலாளர் வரவேற்றார். திரு.வைத்தியலிங்கன் (பி.எஸ்.என்.எல் - ஓய்வு) மகளிர்  நிலை குறித்து விரிவாகப் பேசினார். திருமதி.கவிதாகுமார் வழக்கறிஞர் சிறப்புரை நிகழ்த்தி பின் பரிசுகளை வழங்கினார்.





















மகளிர் தின போட்டிகள்

இன்று சர்வதேச மகளிர் தினம் .. அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ..
அம்மா சமூக சேவா மையம் சார்பில் இன்று காலை புதுச்சேரி முத்தியால்பேட்டை செயிண்ட் சிமோன்பேட்டையில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான லெமன் டீ ஸ்பூன், ஊசி கோர்த்தல், ரிப்பன் கட்டுதல், நினைவுத்திறன், பந்து அடித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
20 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்காக ஒரு பிரிவும், 20 வயதிற்கு மேலான பெண்களுக்காக ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இன்று மாலை பரிசளிப்பு விழா.  காலை நடைபெற்ற போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ...
















Friday 6 March 2015

உங்களோடு சேர்ந்து சர்வதேச மகளிர் தினம்

அன்பிற்குரியவர்களே,
அம்மா சமூக சேவா மையம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் வருகிற 8.3.2015 கொண்டாடப்படவுள்ளது. காலையில் போட்டிகள் மாலையில் பரிசளிப்பு விழா என குதூகலக் கொண்டாட்டம் தான்.  காலை 10 மணி முதல் மகளிருக்கான போட்டிகள் - மாலை பரிசளிப்பு விழா 
அனைவரும் வருக ...